தஞ்சம்

தூரம் போகும் சித்திரை பெண்ணே
துடித்து போகிறதே என் நெஞ்சம்
நகரும் இந்த நிமிடம் 
இப்படியே இருந்துவிடாதா அன்பே..!
இமைகளின் மீது நீயே வாழ்கின்றாய்
நித்தம் உன்னையே காண்கின்றேன்
விழி மூடா கனவிலும்..!
சற்றே கண்களைத் திற
என்னை சிறையிட்டு பின் மூடிக்கொள்
உன் விழியோரத்தில்..!
காதல் என்னும் என் கவிகளில்
கசையடியாய் உந்தன் நினைவுகளை
நெஞ்சம் எங்கும் பதிய வைத்தாயே..!
கொஞ்சமும் மிஞ்சாத நம் உறவில்
நெஞ்சம் தாண்டி மஞ்சம் வளர்த்தவளே
ஒரு கணம் திரும்பி பாரடி
தஞ்சம் அடைகிறேன் உன்னிடம் நானே..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்