நட்பதிகாரம்
காலங்கள் மாறலாம்..! கனவுகள் களையலாம்..! உறவுகள் பல உருவாகலாம்..! நம் உணர்வு தான் மாறுமா..! இல்லை நம் நட்பின் நம்பிக்கை தான் தீருமா..? உணர்வையும், உறவையும் மட்டும் சொல்ல இது காதலும் இல்லை..!காமமும் இல்லை..! உயிர் உள்ளவரை உடன் வரும் உறவுகளின் சங்கமம்..! ஆயிரம் உறவுகள் உன் அருகே அமரலாம் ஆனால், உன் சிரிப்பிற்கு சிறகாகவும்..! உன் விழிக்கு இமையாகவும்..! உன்னுடன் இருக்கும் அந்த ஓர் உறவு உன் முகம் கானா தொலைவில் இருந்தாலும், உன் அகம் நினைக்கும் அந்த ஓர் பொழுதில் உன் நினைவின் முன் வந்து நிற்ப்பேன், ஓர் நல்ல நண்பனாக..! இப்படி உறவில் கலந்து..! உணர்வில் ஒன்றாகி..! வார்த்தையில் வளர்ந்து..! கனவிலும் நினைவான நம் நட்பு என்றும் நிலைக்கட்டும் மனதில் ஓர் காவியமாய்..!