இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பதிகாரம்

படம்
காலங்கள் மாறலாம்..!  கனவுகள் களையலாம்..! உறவுகள் பல உருவாகலாம்..! நம் உணர்வு தான் மாறுமா..! இல்லை நம் நட்பின் நம்பிக்கை தான் தீருமா..? உணர்வையும், உறவையும் மட்டும் சொல்ல  இது காதலும் இல்லை..!காமமும் இல்லை..! உயிர் உள்ளவரை உடன் வரும் உறவுகளின் சங்கமம்..! ஆயிரம் உறவுகள் உன் அருகே அமரலாம்  ஆனால், உன் சிரிப்பிற்கு சிறகாகவும்..! உன் விழிக்கு இமையாகவும்..! உன்னுடன் இருக்கும்  அந்த ஓர் உறவு உன் முகம் கானா தொலைவில் இருந்தாலும், உன் அகம் நினைக்கும் அந்த ஓர் பொழுதில்  உன் நினைவின் முன் வந்து நிற்ப்பேன், ஓர் நல்ல நண்பனாக..!  இப்படி உறவில் கலந்து..! உணர்வில் ஒன்றாகி..!  வார்த்தையில் வளர்ந்து..! கனவிலும் நினைவான நம் நட்பு என்றும் நிலைக்கட்டும் மனதில் ஓர் காவியமாய்..!  

மூங்கில்

படம்
மறக்க இயலுமோ, இந்த மாசரக்கற்றோனின் அருகாமையை, மூங்கில் இசைபாடும் தென்றல்  எங்கள் தோள் மேலும் சாய்ந்ததை  மீண்டும் ஒரு யுகம் வந்தாலும்  பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல்  இதயத்தின் பாதாழம் தேடி  ஒளிந்து கொண்டது...! மரணமே வந்தாலும்  தொலைவு கடந்து போகும்  நினைவுகள்  என்னை விட்டு  தொலைந்து போகாது......!

உயிர்

படம்
கடல் மேல் விழுந்த பனித்துளி போல் நம் உறவு இருக்க....! நீ கானல்நீர் போல் கரைந்து போனாலும் அதன் கூடவே என் உயிர் நீரும் சேர்ந்து போகுமடா...! என் சுவாச காற்றில் கலந்த - நீ மணல் காற்றாய் பிரிந்தாலும் உன் புன்னகை என்னும் ஒரு துளி வியர்வை போதுமடா என் ஆயுள்வரை நீடிக்கும் உயிர்த்துளியாய்....!

தீண்டல்

படம்
பூவிலும் தென்றல் காற்றில் புன்னகை வீசும் உன் முகப்பொழிவின் மயக்கத்தில் தீண்டும் உன் கூந்தல் என்னை தூண்டி  செல்கிறது அன்பே....! 

என் காதலி

படம்
என் மனதில் நின்றவள்...! என் விழி தாண்டி போனவளே சற்றும் உயிர் தாண்ட என்னதவளே உன் பொய்கையில் இருந்த ரசனை என்னை உன் மடியில் மண்டியிட வைத்ததடி.....! உண்மைகள் இதுவென்று யான் அறியும் போதிலே என் மனம் மண்டியிட்டதடி மரணத்தின் வாசர்படியில்....! தனிமையில் உறங்குகிறேன் ....! கனவுகள் தூரமாகி போனது, இன்றும் ஏனோ ஒரு மயக்கம் அதில் உன் நினைவுகள் மட்டும் சுருக்கம்......!

தோரனை"16

படம்
ஆயிரம் நிமிடங்கள் ஆனந்த கூத்தாடினோம், தோரணமாய் ஓர் உயிரானோம், தோரணையில்.... தொள் கொடுத்து தோழர்கள் ஆனோம்...! இந்த நிமிடம் பிரிவும் நம்மை துரத்துகிறது, பிரிவு என்னவோ உடலுக்கு தானே, உயிருக்கு இல்லையே...!

நட்பு

படம்
நாளொரு வண்ணம்                      பொழுதொரு மேனியாய் தேய்ந்து  கொண்டே செல்லும்                      இந்த நொடிகள்....! திரும்ப பெற இயலாத                      நட்பின் நினைவுகள்....! தோள் மேல் கை போட்டு                     பேசிய தருணங்கள் கலாய்த்து கிண்டல் செய்து                     கை தட்டி விளையாண்ட நேரங்கள் ஆண் பெண் சமத்துவம்                     கொண்ட சந்தர்பங்கள்...! நான்காண்டு நியாபகங்கள்                     நாளும் என்னை...! விடாது தொடரும்                    யுகங்கள் தாண்டியும் யூகிக்க இயலாத                  நட்பின் பாச தழுவல்கள் இந்த இறுதி நொடியில்                இனிதான பிரிவில் பார்த்த முகங்கள்                 கண்களை விட்டு மறைந்தாலும் பழகிய முகங்கள்                 நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும் காவியமாய்.....!