இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலின் புரிதல்...

ஆயிரம் தான் ஆசை வச்சேன் அவ கூடையே வாழ நினச்சேன் உயிரே நீதானு உறக்க கூறினேன்.. ஊமை விழிகளை தூது அனுப்பினேன்..! எண்ணங்கள் ஆயிரம் - அதில் அவளின் நினைவுகள் மட்டும் வண்ணங்கள் நிறைந்த வாழ்கையை கருப்பு வெள்ளையாய் மாற்றிபோனாயடி.. ஜென்மங்கள் தாண்டியும்  கூடிட ஆசை கொண்டேன்..! கூத்தாடியாய் தெருவில் விட்டாயடி.. என் உயிர் போனபின்னே புரியட்டும்.. எந்தன் உண்மை காதல்...

எந்தன் காதல் உயிரே

கவியின் காதலியே  மீனம்மா..! மீனம்மா..! தீராத காதல் தீயே  என் செல்லம்மா..!செல்லம்மா..! உன் நினைவில் மயங்கி விழுந்து என் மனதை தொலைக்கிறேன்..! என் கனவில் உன்னை கண்டு எந்தன் சோகம் தொலைக்கிறேன்..! மீனம்மா மீனம்மா  என் உயிரின் கைபிடி நீயம்மா  கண்களின் ஓரம் கசியும்  கண்ணீர் துளியும்..! உன் விரல் பிடித்து நடக்க என் உணர்வும் துடிக்கிறது..! அந்தி மாலைப்பொழுதில் மலைச்சாரல் வீசுகையில்  மனம் என்னவோ  மீனம்மா..! மீனம்மா..!  என்றே கதறுகிறது கதறும் மனமும்  கரையும் குணமும்  உன்னில் பிறந்து  என்னில் முடிகிறது..!  காதல் என்னும் கரும்பு தின்ன  என் மனம் ஏங்கித் தவிக்கிறது..! மீனம்மா - என் உணர்வின்  விழிம்பில் நீயும் உயிரை பறிக்கிறாய்..! உன் மடியில் பிறந்து தவழும் சிறுபிள்ளையாய் உன் மேல் நான் கட்டித்தழுவ ஆசை கொண்டேன்..! எட்டிப் பிடித்து நிலவையும் உன் காலடியில் கிடத்துவேன்..! வானவில்லையும் கொண்டு வந்து வர்ண சேலையாய் சார்த்திடுவேன்..! மின்னலைப் பிடித்து  மின்மினிப் பூச்சியாய்  விளையாட  உன் கையில் தந்திடுவேன்..! சோகம் மறந்து நடக்க  சோலைவனக் கிளியை பாடச்செய்திடுவேன்..! பருவமடைந்த மங்கையாய்  உன்னை மலரச் செய்திடுவ

தேவதை

கனவு தேவதையே  நேரில் வந்தாயே..! உன் கண்ண பாத்து கலர பாத்து மயங்கி விழுந்தேனே..! கண்ணு பேசுதடி  உன் உதடும் பேசுதடி உன் உதட்டோரம் ஒழிந்திருக்கும்  புன்னகையும் பேசுதடி..! இருளில் பிறந்த நிலவே என் மனதை துளைத்த கனவே..! காதல் பேசும் கண்களும்  என் மனதை தட்டுகிறதே..! கருவிழி உனது அந்த இமைகளும் எனது இடைவிடாமல் துடிக்கும் புருவத்தின் மத்தியில் உன்னை தாளாட்டும் வெள்ளை தொட்டில் நான்

என் தோழி

என் உணர்வில் பிறந்த  புது வசந்தமே.. புன்னகை பூத்திடும்  பூக்களின் அரசியே... உன் உறவும் உயிரும்  எனக்கான ஒன்று.. உன்னை நித்தமும் நேசிப்பேன் தினமும் சுவாசிப்பேன்.. கடந்த கால நினைவெல்லாம்  கனவாய் போகட்டும் நிகழ்கால வசந்தமாய் - நம் நட்பு மட்டுமே மலரட்டும்.. உன்னை விட  சொந்தம் ஏதும் எனக்கில்லை நட்பின் மூச்சு காற்றாய் நாமே சுதந்திரமாய் பறந்திடுவோம் என்னாளுமே...

அவளை_தேடி

விழி தேடி வழி தேடி போகும் பாதையில உன்ன கண்டதால்  என் நெஞ்சம் கிரங்கிடுசே.. உறவெள்ளாம் நீதானு எண்ணுகையில் உள்ளம் தடுமாறி போனதென்னவோ... சித்தனவாசல் ஓவியமும் உன் பேர பச்சளை தீட்டியதோ.. என் நெஞ்சு உன் நெஞ்ச அறிந்திடவே காலம் கடந்தும் பயணிக்கிறது.. நீள்கின்ற பாதையெல்லாம்  பாவி மனம் பறக்கிறதே.. உன்னையே எண்ணியே இத்தனைனால் காலம் முழுவதும் தேடுகிறது... இப்போது நீ இங்கு கிடைத்திருந்தும் எப்போது என்னை ஏற்பாயோ... உனக்காக நெடுநாளும் இருந்திடுவேன் உன்னை மணக்காமல்  என் உயிர் எனை விட்டு நீங்கிடாது...

அ.....ஃ

அங்கும் மிங்கும்  ......அலைந்த கண்களே ஆயிரம் நிமிடம் ......தேடியது என்ன இனிதாய் பூத்த இழமலரில் ......இன்பம் மிகுந் தோடியது என்ன ஈகை கண்டு ......விழிகள் கலங்கியதென்ன உண்மை அறிந்து ......உலகம் தெளிந்து என்ன ஊமைகள் பேசிவிட்டால் ......ஊரும் உலகும் உருகிதான் போகும் எண்ணிப்பார் ......அர்த்தங்கள் விளங்கும் ஏற்போர் உள்ளம் ......உறைந்து தான் போகும் ஐவினை அனைத்தும் ......அறம் பேசும் ஒன்றாய் நின்றால் .......எதிர்த்து விடுவோம் ஓரமாய் நின்றால் .......ஒழிந்துவிடுவோம் ஔடதம் பேசு .......ஓவியமாய் வாழ்வோம் அஃதே சிறப்புடன் ......மகிழ்வுருவோம்