இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் நானும்

உன்னை தினம் வேண்டியே தியானம் ஒன்று இருக்கிறேன்...! நினைவொன்றில் நீ மட்டும் நிமிடம் தவராமல் இருக்க வேண்டுகிறேன்...! நீ இலைபாற வேண்டியே உன்னை தினம் நினைக்கிறேன்...! என் வாழ்க்கையில் வெளிச்சம் தர வேண்டியே உன் வரவை எதிர் நோக்கிறேன்...! நீ மட்டும் தான் எந்தன் உலகம் என்கிறேன் இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருத்தல் வேண்டுகிறேன்...!

காலாவதி

கனவிலும் நினைக்காத சூழ்நிலை இனியென்றும் நினைவில் நீங்காத வேள்நிலை வேடிக்கையாய் இருந்துவிட்டோம்...! வேதனைகளை தந்துவிட்டாய்...! வேர்வை துளிகளை விதைத்து விதையின் விருட்சமாய் வளர்ந்து நின்றோம்...! மழைத்துளிகளின் வேகத்தில் எங்கள் ஆணிவேரையும் இழந்து கண்ணீர் கடலில் மிதந்தோம்...! பலகரங்கள் எங்களின் துயர்துடைக்க கைக்கொடுத்தன, அதற்க்கும் பல தடைகள்...! போரடியே வாழ்ந்த எம்மக்கள் தங்கள் உரிமைக்கும், பசிக்கும் போராடவேண்டிய நிலையில்...! காலம் தான் பதில் சொல்லும் என்றால் எங்களின் வாழ்க்கையில் காலமும் காலாவதி ஆகிவிடும் போல்...!

ஓர் கருவின் மிச்சம் அவள்...!

சில நிமிட பார்வையில் பலநூறு மாற்றங்கள்...! பாவை அவள் மத்தியில் புதைகின்ற நிமிடங்கள்...! தோள் உரசி பழகாத காதலில் உயிர் உரச நேரமிருந்தது சமயம் இனம் மறந்து...! எச்சம் இட்ட மனிதர்கள் மத்தியில் மிச்சமாய் ஒரு சொட்டு...! சிலரின் தேடல் இங்கு பலரின் விடியலாய்......! சிலரின் விடியல் பலரின் தேடலின் அவளமாய்...! ஆண்மையின் புரிதல் பெண்மையின் மகத்துவத்தில்....! பெண்மையின் புரிதல் ஆண்மையின் அரவனைப்பில்...! இங்கு இறுதியில் மீண்டும் உதயமாகும் ஓர் கருவின் மிச்சம் (பெண்மை)அவள்...!