இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிர் நோக்கி

மனமே மனமே மன்னிப்பாயோ..!உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! அட நீ தானே எந்தன் உலகம்        உனை நீங்கி எங்கே போவேன் நானும் இந்த மண்ணுலகிலே, மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! காற்றாய் வந்தவளே என் சுவாசம் நிறைந்தவளே   சுமை தாங்கி நிற்கின்றேன் மனம் இறங்கி வா நிலவே.. இரவுக்கு பிறை இல்லாமல் சந்திரன் பிறப்பதில்லை   இங்கு யாருக்கும் குறையில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை மனம் நிறைந்த வேதனைகளை தலையனை அறியும்    உன் மீது கொண்ட காதலை இங்கு யார் தான் அறிவார் உன்னை விட்டுச்சென்றால் எனக்கு வாழ்க்கை இல்லை   மனமே மனமே மன்னிப்பாயோ..!   உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! வாழ்க்கை எனும் தேரிலே    ஏரி பயணிப்போம் ஊரிலே      உலகம் சொல்லும் வார்த்தையை   ஊமையாக்குவோம் தரணியிலே.. எனக்காக நீ இருந்தால் உன் அன்பெனும் மாளிகையில் வாழ்ந்தே இறப்பேன்..! உனை எதிர் நோக்கி...

என்னில் நீ

வானம் தொடாத மேகங்கள் வர்ணம் பூசாத வானவில் மழைத்துளி விழாத மண்வாசனை புயலாய் வந்த தென்றல் பூக்கள் மலராத சுவாசம் வண்டுக்கள் அருந்தாத தேன் மௌனம் நிறைந்த கவிதை எதிர்பாராத வாழ்க்கை அத்தனையும் ஒரே ஜென்மத்தில் முடிந்துவிட்டது என எண்ணுகையில் விருச்சமாய் முளைத்த - என் வாழ்வின் மிச்சம் என்னில் உறைந்த நீ..

உள்ளம்

 உன்னாலே வாழ்ந்தேன் நானே..! உன் உணர்வோடும் உயிரோடும் கலந்தேன் நானே..! உன் முகம் காணாமல் இருந்ததே இல்லை இன்று கனவிலும் தொலைத்தேன் உன்னை.. அலாரம் வைத்தும் எழுந்ததும் இல்லை சேவல் கூவியும் எழுந்ததும் இல்லை உன் குறல் கேட்டே விடியும் என் பொழுது உனக்காக என் உயிரையும் தருவேன் என்றேன் இன்று உனை நீங்கி என் உயிர் யாருக்கு இருக்கிறது.. எழும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் நீயா பேசியது என்று நாக்கும் கேட்கும்.. என் உயிரிலே கலந்த உன்னை உடலை பிரித்து உலகம் தனித்து பிரிந்தேன் இன்று...