இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரயில் பாதை

படம்
 இரயில் பயணத்தில் அடுத்த நிறுத்தம் தேடி  அலையும் பயணியை போல  உன் முகவரி  தேடி அலைகிறேன்.. உனக்கான என்  முகவரி  என் நிழலாகி போனதை போல்... என் வாழ்க்கை பயணத்தின்  ஒரு பகுதி உனதாகி போகிறது... நீண்ட இப்பிரபஞ்சத்தில் நமக்கான தேடலும் நீண்டுக்கொண்டே தான்  போகிறது... இரயில் தண்டவாளங்களை போல... இடைவெளியும் குறையவில்லை ஒன்றோடு ஒன்று ஒட்டவுமில்லை நாட்கள் மட்டும்  கடந்து கொண்டே போகிறது... மனங்கள் மட்டும்  தவித்து தவித்து அடங்கி போகிறது.. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்.... ✍️அமரகவி

கடந்துவிட முடியாது

படம்
  இருவிரல் இணைப்பில் இறுதியாய் கடந்த பாதை தோல் உரசாத கனத்தில்  விழிகள் உரசி ஊடுருவிய மின்சாரம்... தொட்டால் பளீச் என வெட்டும் மின்வெட்டை போல உடல் தொட்டு நடுங்கியது... அவளின் நீளக்கருங் கூந்தல் காற்றோடு அசைந்து என் முகம் தழுவ தென்றலோடு கரைந்து போனேன்.. விளையாட்டாய் வம்பிலுக்க வேண்டும் என்றே வந்தாள் தன் இடையை வளைத்து என் மனதை மயக்கி... யாரும் கண்டுக்கொள்ளாத நிமிடத்தில் கண்ணத்தில் பச்சை குத்தினால் தன் இதழ் ஊசியால்... அவள் விரல் ரேகையெல்லாம் இதழ் ரேகையாக பதிந்துவிட்டது  கண்ணக்குழி இடுக்கில்... கால் போன போக்கிலே மனங்களும் போனது.. ஒன்றை ஒன்று பின் தள்ளி... அவள் ஓர விழிகளில் என் வார்த்தை  மௌனமாகி போனது... சந்தோசமான நாட்களுக்கு  மத்தியில்  சில நித்திரை கனவுகளும் என் வீட்டு கதவை  தட்ட தான் செய்கின்றன... காலத்தின் சுழற்சியில் வாழ்க்கை பாதையில் மாரி  கொட்டியும்  தீர்க்கிறது... கானல் நீராய் கண் கட்டியும் நீர்க்கிறது...  அவளுடனான நினைவு பாதைகளை கால் கொண்டு மட்டும்  கடந்து விட முடிவதில்லை... ✍️அமரகவி

கடைசி வரி

படம்
 ஒரு வேளை நான் மரணமடைந்துவிட்டால் என்னால் எழுதிய  எழுத்துகளை அழித்துவிடாதீர்கள் அவை அனைத்தும் நான் என் சுயநினைவோடு உங்களுக்காக  உங்கள் நினைவுகளோடு தேடி சேகரித்த வார்த்தைகள் சேதபடுத்திவிடாதீர்கள் பிற்காலத்தில் யாரோ யாருக்கோ எழுத போகின்ற  சிறு நினைவுகளில் என் எழுத்துகளும் இருந்துவிட்டு போகட்டும்... உங்கள் அழைப்பேசியில் என் தொலைப்பேசி எண் சேமிப்பில் இருக்கும் தொல்லை என்று  தொலைத்துவிடாதீர்கள் உங்கள் மனதில்  இல்லாத என் பெயர் உங்கள் தொ(ல்)லைப்பேசிலாவது இருந்துவிட்டு போகட்டும்.. என் நினைவை அழிக்க  சிரம படாதீர்கள் வாய்விட்டு ஒருமுறை  கத்திவிட்டு சொல்லுங்கள் உங்கள் இதயத்தில் இல்லை உங்கள் நினைவில் கூட வரமாட்டேன்.. ஒளிக்கோப்பாய் பிற்கால  நியாபகத்திற்காக எடுக்கப்பட்ட  புகைப்படங்களை  அழித்துவிடாதீர்கள் ஒரு நாள் நினைவு வரலாம் இவன் நம் நண்பன் என்று அன்று அனைத்தையும்  குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் இறந்து சாம்பலான பின்.. என்ன இருந்து  என்ன புண்ணியம் நிகழ்காலத்தில்  நிம்மதி இல்லையென்றால் நித்திரையிலே உன் மத்திரையிலே நான் சடலமாக  வாழ விரும்பாத இதயத்தின்  வேண்டுகோள்... நிறைவேற்றிவிடுங்கள் ஆயிரம் ஆச