பறவை
திசை சொல்லும் பறவைகள் கூட்டம் தென்றல் காற்றில் உதிற்ந்த மகரந்த துகள்களை தேடி செல்லும் இந்த நிமிடம், பனி விழும் புற்களுகக்குள் புதைந்து கிடக்கும் திருமொழி கீற்றே..! திசையெங்கும் தேடி அலைகிறேன் வழி தெரியா பறவையை போல்.....
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்