இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ மறைக்கும் புன்னகையில்

படம்
வழிந்தோடும் நதியில்  மறைந்திருக்கும் பூ மகளே.. உன்னை கடக்கும் நேரமெல்லாம் நதியும் சற்றே  நின்று தான் போகிறது... ஒரு நொடி பொழுதேனும்  கண்டுவிட மாட்டோமா என்று நீ மறைக்கும் புன்னகையை... யாருக்கு தெரியும்..? நீ மறைப்பது உன் புன்னகையில்  என்னை தவிர  வேராரும் விழுந்துவிட  கூடாதென்பதற்கென்று..!

நீயும் நானும்

படம்
நீண்ட நீண்ட காலம்  நீயும் நானும் மட்டும்  நீந்தி போவோம்... நீரின் ஆழத்தை கடந்து, விரல் பிரியா இருக்கத்தில் உன்னை பிரியா நானாக என்னை பிரியா நீயாக காலம் கடந்தும்  பயணிப்போம் காலத்தின் ஓடத்தில்...

🔥சரணஜோதி🔥

படம்
வீசுகின்ற தென்றலில்  பூக்கின்ற மலர்களை போல் தூவுகின்ற மழைத்துளியில் விழுகின்ற முத்துகளை போல் புன்னகைகின்ற மதியின் பிராகாசிகின்ற பௌர்ணமியை போல் கொள்ளை கொள்ளும்  முத்துச்சிற்பி பவளவாய் செஞ்சுடரே... என் மனதை  மின்னல் போல் உள்ள  உந்தன் கருவிழி அம்புகள் தாக்குகின்றன... சற்றே ஒரு நொடி  கண்களை திசைமாற்று உயிர்பித்துக் கொள்கிறேன் உன் மேல் நான் கொண்ட  மோகத்தின் காதலை... கனவுகளில் கசிந்திடும்  கண்ணீர் துளிகளும்  சரணம் அடைகிறது ஜோதியின் பாதச்சுவடுகளில்... எந்தன் உள்ளம்  இத்தனை நாள் தேடியது  உன்னை போன்ற  ஓர் வெண்ணிற அரசிலங்குமரியை தானோ என்னவோ.. திசைகள் எட்டும் முட்டினாலும் மனம் என்னவோ வடக்கே தான் பாய்கிறது.. காத்திருப்பதும் ஓர் சுகமே காதலை விட காந்தம் போல் நம் நட்பு  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்  தொடரும் என்ற ஓர் நம்பிக்கையின் விழிம்பில்  கவிஞன்...???