இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போதை

படம்
மனதின் வாசலில் மாஇலை தோரணம் அருகில் தேவதையின் கால் தடம் எனை வரவேற்க வந்த நிலவின் கூர்ந்த விழியால் அகம் கிழிந்து போனதே எங்கிருந்தோ வந்த மணம் எனை எட்டி எட்டி தேடசொல்லுதே.. மொட்டிலிருந்து பிறந்த மலரே அவள் புன்னகையில் நானும் கவிழ்ந்தனே பூமியும் இவள் முகம் கண்டுதான் சூழன்று போனதோ மது உண்ட மயக்கம்  மங்கையின் முகம் கண்டும் வருவது ஏனோ..? விரக்தியில் வீழ்ந்த என்னை  விழி கொண்டு உயிர்பித்தாலே எதை கண்டும் உறையாத உள்ளம் அவள் மதி கண்டு உறைவது ஏனோ..? விந்தைகள் ஆயிரம் கண்டும்  கலங்காத நெஞ்சத்தை வந்தவள் வியப்பை ஊட்டி சென்றாலே ஒற்றை நொடி புன்னகையில்..

வாழ்த்து

தென்றல் காற்றே  தென்றல் காற்றே வாழ்த்து சொல்லி நகருதே.. பூக்கள் மீது பன்னீர் போல தட்டி தழுவி போகுதே... வானம்,  மறைத்த மேகத்தில் கூட இங்கே நிலவும்  புதிதாய் பிறந்திருக்கு,  புது  வெள்ளை மழையும் அர்ச்சனை  தூவ காத்திருக்கு.. இந்த நேசம் ஒன்றே  போதுமடி  எந்தன் மாமன் பெற்ற  மாணிக்கமே... ஏழேழு உலகமும் இந்த மழலை மனம்  மாறாத சிறு பிள்ளைநிலவை தாலாட்டி சீராட்டி  கொஞ்சிடுமே..!

விடியாத இரவுகள்

படம்
விடியாத இரவுகள்  முடியாத பயணங்கள் துணையாக உலா வரும் காதலின் கனவிவள்.. துணையேது, அறிந்திட நினைக்கும்  நிமிடங்களில் வாய்மொழியாய்  பேசிடும் குயிலிவள்... இந்த இரவுதான்  கழியுதோ - இல்லை  கனா தொலையுதோ, என்று உணரும் நேரமே உயிரின் உரமிவள்.. சொல்லிலே,  கிடைக்காத கீர்த்தியும் பாவனையில்  மறைத்திடுகிறாள், சிந்தனையை  சிதைத்திடுகிறாள், மெழுகு உருகி  கரைவது பேலே கன்னி மனம் கரைத்துடுகிறாள்... பொழுது விடியும் வரை விழிகள் தாண்டி  சிந்திக்கவிடாத சிறைக் கொண்டவளாய் கவந்திழுக்கிறாள்,  இரவின் மடியில்.... மயங்கடிக்கிறாள்...