காட்டு பூவே


காதோரம் கதை பேசி
              காத்தோடு கரைந்தவளே...
கண்ணம் நிறைய கைப்பட்டு
              கனவோடு தொலைத்தவளே...
காண்கின்ற யாவும் நீயாக
             கனவில் தெரிகிறாய் உயிராக...
காட்டுப் பூவும் மலர்ந்ததடி
             காட்டுச் சிருக்கி கைப்பட்டு...
கதவுகள் திறந்தே இருக்கிறது
             கானா குயிலே உனக்காக...
கவிதைகள் பாடி கழித்திடுவேன்
             கண்ணே உன்னை காணும் வரை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்