தொடர் கதை
உன்னை காணுமுன்
களவாடி போன என் பொழுதுகள்...!
உன்னை கண்ட நாள் முதல்
கரைந்து போனதடி உன்னில் என்னை..!
காதலித்தேன் ஒருதலையாக அன்று
காதலிக்க படுகிறேன் இருதலையும்
நீயாக இன்று...!
காலம் என்னும் பெருவெள்ளத்தில்
காதலித்து நீந்தூவோம்
கரையை நோக்கி அல்ல...!
காதலின் ஆழத்தை நோக்கி..!
உன்னை காணும் வரை
காதலை கூட நான் ரசித்தது இல்லை...!
உன்னை காதலித்த பின்
கனவையும் அதன் சுவை மாறாமல் சுவைக்கிறேன்...!
காரணம் நதி ( நந்தினி ) யில் பூத்த மலர்
என் கனாவிலும் பூக்க தொடங்கியதால்...!
காதல் உலகம் அறிய ஆசைப்பட்டேன்
உன்னை கண்ட நொடியில் தான்
ஓர் ஜென்மத்தின் காதலை கண்டுகொண்டேன்..!
உன் இடைமுகப்பில் சொருகி வைத்த முந்தானையும்
சிறிதும் இடைவெளி இல்லாமல் இருக்க அனைத்துக் கொண்டதடி
உன்னில் என்னை...!
கல்வி மட்டுமே கற்பிக்க தெரிந்த விழிகள்
எனக்கு காதல் கலையையும் கற்பிக்கின்றன
உன் சிறு கண் சிமிட்டலில்...!
கவிஞனுக்கு காதல் பற்றி
கனா பாட தெரியும்
கண்ணியவல் கண்களை பற்றிப்
பாடியது இந்த நொடியில் தான்...!
காலப் பெருவெளியில்
அண்டம் சூழ்ந்த இருளில்
மணி ஒன்றை தொடும் வேளையில்
மணாளன் மணாளியின்
மேல் கொண்ட காதல் பினைப்பை
தன் அகம் நினைக்கும்
கற்பனை வரிகளால் தொடுத்து
தொடர்கிறான்....!
பேதை மேல் கொண்ட காதல்
முடிவே இல்லாத
ஓர் தொடர் கதை என்று...!
கருத்துகள்