நீ மறைக்கும் புன்னகையில்
வழிந்தோடும் நதியில்
மறைந்திருக்கும் பூ மகளே..
உன்னை கடக்கும் நேரமெல்லாம்
நதியும் சற்றே
நின்று தான் போகிறது...
ஒரு நொடி பொழுதேனும்
கண்டுவிட மாட்டோமா என்று
நீ மறைக்கும் புன்னகையை...
யாருக்கு தெரியும்..?
நீ மறைப்பது
உன் புன்னகையில்
என்னை தவிர
வேராரும் விழுந்துவிட
கூடாதென்பதற்கென்று..!
கருத்துகள்